For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடுக்கடலில் தத்தளித்த 120 இலங்கைத் தமிழர்கள் பத்திரமாக மீட்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

நாகை: நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்ற போது நடுக்கடலில் படகு பழுதானதால் மாட்டிக் கொண்டு தவித்த இலங்கை அகதிகளை இந்திய கடலோரக் காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்.

நெல்லை, திருச்சி மாவட்ட அகதிகள் முகாம்களில் இருந்த 120 இலங்கை அகதிகள் நேற்றிரவு 10 மணியளவில் வேளாங்கண்ணியில் இருந்து கள்ளத்தோணியில் ஏறி ஆஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டனர். இன்று காலை 10 மணியளவில் நாகையில் இருந்து 9 நாட்டிகல் மைல் தொலைவில் சென்ற போது இன்ஜின் கோளாறு ஏற்பட்டு படகு பழுதானது. நீண்ட நேரம் போராடியும் இன்ஜினை சரி செய்ய முடியவில்லை.

பின்னர் இந்தியக் கடலோர காவலற்படையினருக்கு படகில் இருந்த அகதிகள் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து தேடுதல் பணியை தொடங்கிய இந்திய கடலோரக் காவற் படையினர் நடுக்கடலில் தத்தளித்த அகதிகளை மீட்டனர். அவர்கள் அனைவரும் கோடியக்கரைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என தெரிகிறது.

English summary
Hundreds of Sri Lankan refugees rescued to Indian Navy at Nagai sea shore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X