ஏப்ரல் 25ம் தேதி கண்ணகி கோவில் விழா
தேனி: மங்கல தேவி எனப்படும் கண்ணகி கோவிலில் ஏப்ரல் 25ம் தேதி சித்ரா பவுர்ணமி விழா நடைபெறவுள்ளது. இதையடுத்து இதுதொடர்பான ஏற்பாடுகளைக் கவனிக்கும் பொருட்டு தேனி மற்றும் இடுக்கி மாவட்ட கலெக்டர்கள் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக் கூட்டம் தேக்கடியில் உள்ள ராஜீவ் காந்தி கல்வி மையத்தில் நடந்தது. அதில் இரு மாவட்ட ஆட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர். மற்றும் அதிகாரிகள், கண்ணகி கோவில் அறக்கட்டளை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்...
கோயிலில் வழிபாடு காலை 6 முதல், மாலை 6 மணி வரை நடைபெற இருப்பதால், குமுளி செக் போஸ்டில் அதிகாலை 5.30 முதல் மாலை 3 மணி வரை மட்டும் வாகனங்கள் அனுமதிக்கப்படும்.
கோயில் வளாகம் கேரள வனத்துறை சார்பில் சீரமைக்கப்படும்.
ஜெனரேட்டர் மற்றும் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளுக்கு அனுமதியில்லை.
குமுளியில் இருந்து கோயில் வரை உள்ள 14 கி.மீ., தூர வனப்பாதையில் தமிழ், மலையாளம், ஆங்கிலத்தில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.
நடைபாதையில் குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.
பிளாஸ்டிக், பாலிதீன் பைகள் கொண்டு செல்லக்கூடாது.
கோயிலில் பக்தர்கள் அமர, கூடுதல் கூடார வசதி செய்து தர வேண்டும்.
கோயிலுக்கு செல்லும் ஜீப் டிரைவர்களுக்கு, அனைத்து உரிமங்களும் சரியாக இருந்தால் மட்டுமே, பாஸ் வழங்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications