மனைவி இறந்த துக்கம் தாங்காமல் இறந்த கணவன்: திருப்புவனத்தில் சோகம்
Subscribe to Oneindia Tamil

திருப்புவனத்தை அடுத்த நயினார் பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கசாமி, வயது 75. அவரது மனைவி பஞ்சவர்ணம் வயது 68. இவர்களுக்கு இரண்டு மகன்களும், மூன்று மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர்.
தங்கசாமியும், பஞ்சவர்ணமும் கூலிவேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் ஞாயிறு மதியம் பஞ்சவர்ணம் திடீரென உயிரிழந்து விட்டார்.
மனைவி இறந்த துக்கம் தாங்காமல் சடலத்தின் அருகே அமர்ந்து அழுது கொண்டிருந்தார் தங்கசாமி. இரவு 10 மணியளவில் தங்கசாமிக்கும் மாரடைப்பு வரவே அதே இடத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
ஒரே நேரத்தில் கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் திருப்புவனம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications