சுய விருப்ப நிதியிலிருந்து மருத்துவ மாணவருக்கு லேப்டாப் வழங்கிய கலெக்டர்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை மருத்துவ கல்லூரியில் பயிலும் ஏழை மாணவருக்கு கலெக்டர் சமய மூர்த்தி அவரது சுய விருப்ப நிதியிலிருந்து லேப்டாப் வழங்கினார்.

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் நடந்தது. கூட்டத்தில் நெல்லை மகாராஜா நகர் முனிசிபல் காலனி 2வது தெருவை சேர்ந்தவர் சுடலைமணி. இவர் தனியார் காற்றாலை நிறுவனத்தில் கிரேன் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் பாண்டியராஜா. இவர் பிளஸ்டூ தேர்வில் 1156 மதிப்பெண் பெற்றுள்ளார்.

தற்போது நெல்லை மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தந்தையின் வருமானத்தில் ஏழமையான நிலையில் மருத்துவ படிப்பு படித்து வரும் தனக்கு கல்வி பயில உதவியாக லேப்டாப் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெல்லை கலெக்டரிடம் மனு அளித்தார்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய கலெக்டர் மாணவரின் நிலையை கருத்தில் கொண்டு தனது சுய விருப்ப நிதியிலிருந்து லேப்டாப் வழங்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாளில் 33 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான லேப்டாப்பை கலெக்டர் சமயமூர்த்தி வழங்கினார். மனுவை பரீசலித்து லேப்டாப் வழங்கிய. கலெக்டருக்கு மாணவர் நன்றி தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+