சஸ்பெண்ட்டை எதிர்த்து 6 தேமுதிக எம்.எல்.ஏக்கள் போட்ட வழக்கு.. சட்டசபை செயலாளருக்கு நோட்டீஸ்

சட்டசபையில் பிப்ரவரி 8ம் தேதி தேமுதிக எம்.எல்.ஏக்கள் பெரும் அடிதடியில் இறங்கினர். அதிருப்தி தேமுதிக உறுப்பினர் தமிழழகன் பேசிக் கொண்டிருந்தபோது அவர்கள் ஆவேசத்துன் அவரை அடிக்கப் பாய்ந்தனற். அதைத் தடுக்க முயன்ற இன்னொரு அதிருப்தி எம்.எல்.ஏவான மைக்கேல் ராயப்பன் அதில் சிக்கி அடி வாங்கினார்.
இதையடுத்து சட்டசபை உரிமைக் குழு விசாரணைக்கு சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதையடுத்து விசாரணை நடத்திய உரிமைக் குழு மார்ச் 25ம் தேதி அறிக்கை கொடுத்தது. அதன் அடிப்படையில் தேமுதிக கொறடா வி.சி.சந்திரகுமார், உறுப்பினர்கள் அனகை முருகேசன், பார்த்தசாரதி, பால அருள் செல்வன், செந்தில்குமார் ஆகியோர் ஒரு வருடத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
இதற்கு திமுக உள்ளிட்ட அத்தனை எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. இது அரசியல் பழிவாங்கல் என அவை கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையைத் தொடர்ந்து சஸ்பெண்ட் காலம் 6 மாதமாக குறைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
இந்த நிலையில் சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து 6 எம்.எல்ஏக்களும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று நீதிபதி ராஜேஸ்வரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டசபை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, தனிப்பட்ட முறையில் மனுதாரர்களும் நோட்டீஸ் அனுப்பலாம் என அறிவுறுத்தினார்.
பின்னர் விசாரணை ஏப்ரல் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications