சாப்பாடு போடலீங்க... அதனால் மருமகள வெட்டிக் கொன்னுபோட்டேங்க: 85 வயது மாமனார் பரபரப்பு வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

கோவை: சாப்பாடு போடாததால் மருமகளை வெட்டி கொன்றேன் என்று கைதான 85 வயது மாமனார் வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த தாசநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி, கூலி தொழிலாளியான இவரது மனைவி தெய்வாத்தாள் (45). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 7ம் தேதி தெய்வாத்தாள் வீட்டில் இருந்தார். அங்கு வந்த மாமனார் கருப்பண்ணன் (85), தெய்வாத்தாளை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினார்.

படுகாயம் அடைந்த தெய்வாத்தாளை கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின். சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார்.

இதுகுறித்து, அலங்கியம் போலீசார் கொலை வழக்கு பதிந்து கருப்பண்ணனை கைது செய்தனர். அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், ‘மருமகள் எனக்கு சாப்பாடு போடுவதில்லை. இதனால் பட்டினி கிடந்தும், ஓட்டலில் சாப்பிட்டும் சமாளித்து வந்தேன். அந்த ஆத்திரத்தில் கொலை செய்தேன்' என கூறியுள்ளார்.

இவரது மகன் கருப்பசாமி கூறுகையில், ‘தந்தைக்கு சொந்தமாக 75 சென்ட் இடம் உள்ளது. வட்டிக்கு பணம் விட்டு, அதில் வரும் வருமானத்தில் அவர்தான் ஓட்டலில் சாப்பிட்டு வந்தார். சாப்பாடு போட நாங்கள் மறுத்ததில்லை. எதற்காக கொலை செய்தார் என தெரியவில்லை என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+