ராஜஸ்தான் மருத்துவமனையில் பச்சிளம் பெண் குழந்தையின் கண்களை திண்ற எறும்புகள்
ஜோத்பூர்: ஜோத்பூரில் உள்ள உமைத் மருத்துவமனையில் இன்குபேட்டரில் வைக்கப்பட்ட பிறந்து 9 நாளே ஆன பெண் குழந்தையின் கண்களை எறும்புகள் திண்றுள்ளன.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ளது உமைத் மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுமார் 26 பெண்களுக்கு ஹெச்ஐவி வைரஸ் உள்ள ரத்தம் செலுத்தப்பட்ட பிறகு அவர்கள் அனைவரும் உயிர் இழந்தனர். இந்நிலையில் இந்த மருத்துவமனையில் மீண்டும் ஒரு கொடூரம் நடந்துள்ளது.
குறைமாதத்தில் பிறந்த மோகன் என்பவரின் பெண் குழந்தை சிகிச்சைக்காக உமைத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. இன்குபேட்டரில் வைக்கப்பட்ட குழந்தையின் கண்களை எறும்புகள் திண்றுள்ளன.
இது குறித்து மோகன் கூறுகையில்,
பல முறை புகார் செய்தும் மருத்துவர்கள் எனது குழந்தையை கவனிக்கவில்லை. குழந்தையின் கண்கள் வீங்கியிருப்பதாகக் கூறியும் அவர்கள் வந்து பார்க்கவில்லை. ஊடகங்களில் செய்தி வந்த பிறகே மருத்துவர்கள் வந்து கவனித்தனர் என்றார்.
இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஒரு குழு அமைத்துள்ளதாகவும், அதன் அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் ஜோத்பூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் அரவிந்த் மாத்தூர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications