தூக்கை ரத்து செய்யக் கோரும் புல்லர் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்!

1993-ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற குண்டுவெடிப்பு வழக்கில் 9 பேர் பலியாகினர். இதில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த காலிஸ்தான் இயக்கத்தைச் சேர்ந்த தேவேந்தர் பால்சிங் புல்லருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை ரத்து செய்து தமக்கு கருணை கோரி 2003-ல் குடியரசுத் தலைவருக்கு மனு ஒன்றை அனுப்பியிருந்தார் புல்லர். ஆனால் அவரது கருணை மனுவை 2011-ஆம் ஆண்டில்தான் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நிராகரித்திருந்தார்.
கருணை மனுவை 8 ஆண்டுகள் காலதாமதமாக குடியரசுத் தலைவர் நிராகரித்ததால் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்றும் புல்லருக்கு சிறையில் மனநிலை சரியில்லை என்றும் அவர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. .
இம்மனு மீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதில், குடியரசுத் தலைவர் கருணை மனுவை தாமதமாக நிராகரிப்பதாலேயே தூக்கு தண்டனையைக் குறைகக் முடியாது. இந்த ஒரு காரணத்தாலே தூக்கு தண்ட்னையை ஆயுள் தண்டனையாக குறைக்க முகாந்திரம் எதுவும் இல்லை என்று கூறி புல்லரின் மேல்முறையீட்டு மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம். இருப்பினும் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யக் கூடிய ஒரு வாய்ப்பும் இருக்கிறது. அந்த மனுவையும் உச்சநீதிமன்றம் நிராகரித்தால் புல்லருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வாய்ப்பு இருக்கிறது.












Click it and Unblock the Notifications