வறட்சியைப் பார்வையிட வந்த அமைச்சர்களின் கார்கள் மோதல்
கடலூர்: வறட்சி நிலையைப்பார்வையிட வந்த தமிழக அமைச்சர்களின் கார்கள் இரண்டு ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் விபரீதம் ஏதும் நடைபெறவில்லை.
கடலூர் பகுதிகளில் நிலவும் வறட்சி நிலை குறித்து தமிழக அமைச்சர்கள் குழு அப்பகுதிகளில் ஆய்வு செய்து வருகிறது. அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், முனுசாமி, தாமோதரன்,செந்தில்பாலாஜி தோப்பு என்.டி. வெங்கடாச்சலம் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் வறட்சி நிலை குறித்து பார்வையிட்டுவிட்டு, பெரம்பலூர் நோக்கி சென்றனர்.
குளித்தலையில் இருந்து முசிறி அருகே சென்று கொண்டிருந்த போது முன்னாள் சென்ற தாமோதரன் கார் ஸ்பீடு பிரேக்கில் திடீரென நின்றது. இதனால் பின்னால் வந்த வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்றாக மோதின. இந்த விபத்தில் அமைச்சர் வெங்கடாச்சலத்துக்கு முதுகில் அடிபட்டது. அமைச்சர் தாமோதரனுக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது. இவர்கள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டனர்.
ஐஏஎஸ் அதிகாரி சந்திப் ஷக்சேனாவுக்கு கையில் முறிவு ஏற்பட்டது. அவர் திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications