சோளிங்கர் அருகே இருபிரிவினரிடையே மோதல்- தீ வைப்பு சம்பவங்களால் பதற்றம்!
வேலூர்: சோளிங்கார் அருகே நேற்று இருபிரிவினரிடையே நேற்று மாலை ஏற்பட்ட மோதலால் ஹோட்டல், வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சோளிங்கர் அடுத்த அரக்கோணம் சாலை காந்தி நகர் பகுதியில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி ஒரு பிரிவினர் பேனர் வைத்திருந்தினர். அதே பகுதியில் மற்றொரு அரசியல் கட்சி சார்பில் மாநாடு குறித்த பேனர் ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது. இதில் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினர் வைத்திருந்த பேனரை கிழித்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு பிரிவினருக்கும் இடையே நேற்று மாலை மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பூடலூருக்கும் பரவியது. ஒரு தரப்பினர் அருகில் இருந்த ஓட்டல் மற்றும் 2 குடிசை வீடுகளுக்கு தீ வைத்தனர்.
இதைத் தொடர்ந்து அங்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது போலீசார் நோக்கி கற்கள் வீசப்பட்டன. இதனால் அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் சங்கர் மோதல் பகுதிகளை நேரில் பார்வையிட்டார். அப்பகுதியில் பதற்றம் நீடிப்பதால் சோளிங்கர்-அரக்கோணம் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications