ஈமு கோழி மோசடி: சுசி நிறுவன சொத்துக்கள்- வாகனங்கள் பறிமுதல்

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை தலைமையிடமாகக் கொண்டு சுசி ஈமு கோழி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதேபோல் திருப்பூர், ஈரோடு, கோவை, சேலம் மாவட்டத்திலும் ஏராளமான ஈமு கோழி பண்ணைகள் செயல்பட்டு வந்தன.
ஈமு கோழியில் முதலீடு செய்தால் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்று கவர்ச்சிகரமான விளம்பரம் செய்யப்பட்டது. இதனை நம்பிய விவசாயிகளும், பொதுமக்களும் லட்சக்கணக்கில் முதலீடு செய்தனர். பணம் கட்டியவர்களுக்கு பண்ணையாளர்கள் சார்பில் பண்ணைகள் அமைத்து ஈமு கோழிகள் வழங்கப்பட்டது. தீவனமும் வழங்கப்பட்டது.
சில மாதங்கள் சரியாக பணம் கொடுத்த பண்ணையாளர்கள் பின்னர் நாளடைவில் பணம் கொடுக்காமல் ஏமாற்றத் தொடங்கினர். சுசி ஈமு நிறுவனம் உள்பட அனைத்து ஈமு கோழி நிறுவனங்களும் முதலீட்டாளர்களுக்கு ஏற்கனவே அறிவித்தபடி பணம் கொடுக்காமல் இழுத்தடித்தன. வட்டியும், கட்டிய பணமும் வராததால் முதலீட்டாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
பல நூறு கோடி ரூபாய்களை முதலீடு செய்தவர்கள் சுசி ஈமு நிறுவனத்தை முற்றுகையிட்டனர். ஈமு நிறுவன மோசடி குறித்து கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் தெரிவித்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார், சுசி நிறுவன நிர்வாக இயக்குனரான குரு என்பவரை கைது செய்தனர். அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சுசி ஈமு கோழி பண்ணை நடத்தி மோசடியில் ஈடுபட்டவர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை பறிமுதல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்கள்.
சுசி ஈமு நிறுவனத்துக்கு சொந்தமான பணம் பல்வேறு பெயர்களில் முதலீடு செய்யப்பட்டிருந்தது. அவற்றின் மதிப்பு1 கோடியே 37 லட்சம் ஆகும். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஈமு கோழி நிறுவனத்திற்கு சொந்தமான 16 ஏக்கர் நிலத்தையும் பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து குருவுக்கு சொந்தமான 3 கார், ஒரு வேன், ஒரு ஜீப், ஒரு லாரி, 4 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.40 லட்சத்து 60 ஆயிரம் ஆகும்.
பறிமுதல் செய்யப்பட்ட அசையா சொத்துக்களை வருவாய் துறை மூலம் ஏலம் விட்டு அதன் மூலம் கிடைக்கும் பணம் முழுவதும் முதலீட்டாளர்களுக்கு பிரித்து கொடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பணம் திரும்பக் கிடைக்குமா என்று எதிர்பார்த்துக் காத்திருந்த முதலீட்டாளர்களுக்கு அதிகாரிகள் தெரிவித்துள்ள வார்த்தைகள் நம்பிக்கை அளித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications