Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏழுமலையானைத் தேடி வந்த ரூ.16 கோடி நன்கொடை

Subscribe to Oneindia Tamil

Lord Venkateswara gets a Rs 16 crore gift
திருப்பதி: அமெரிக்காவில் செட்டிலான இந்தியத் தொழிலதிபர் ராமலிங்க ராஜு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ. 16 கோடி நிதியை நன்கொடையாக அளித்துள்ளார்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு வருகை தந்த அவர் இதற்கான வரைவுக் காசோலையை தேவஸ்தான தலைவர் கானுமுரி பாபி ராஜுவிடம் நேரில் அளித்தார்.

இந்தப் பணம் திருப்பதி கோவிலின் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்காக செலவிடப்படவுள்ளது.

இதுகுறித்து பாபி ராஜுகூறுகையில், ராமலிங்க ராஜு கொடுத்துள்ள நிதியில் ரூ. 11 கோடி பணத்தைக் கொண்டு, 35 கிலோ தங்கத்தினால் ஆன சஹஸ்ர நாம மாலை தயாரிக்க பயன்படுத்தப்படும்.

ரூ.5 கோடியை அன்னப்பிரசாத பவனம் கட்டுவதற்குப் பயன்படுத்தப்படும். இந்த அன்னப்பிரசாத பவனம், திருச்சானூரில் கட்டப்படும்.

தேவஸ்தானத்திற்கு உட்பட்ட ஸ்ரீவாரி பாடலுவில் தியான மந்திர் கட்டுவதற்கு ரூ. 65 லட்சம் நிதியைத் தருவதாகவும் ராமலிங்க ராஜு சம்மதித்துள்ளார் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+