சத்தீஸ்கரில் சிறுவனின் தலையை வெட்டி கடவுளுக்கு காணிக்கை கொடுத்த மந்திரவாதிக்கு தூக்கு
ராய்பூர்: சத்தீஸ்கரில் 11 வயது சிறுவனின் தலையை வெட்டி நரபலி கொடுத்தவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டம் கார்கோடா பகுதியைச் சேர்ந்தவர் திலீப் ரதியா(32). மந்திரவாதி. அவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரவீன்(11) என்ற சிறுவனை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று அவன் தலையை வெட்டி அதை கடவுளுக்கு காணிக்கையாக்கினார். பின்னர் பிரவீனின் தலையில்லா எழும்புக்கூடு பார்பள்ளி என்ற பழங்குடியின கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டது.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி திலீப்பின் வீட்டில் சோதனை நடத்தியபோது சிறுவனின் தலை கிடைத்தது. இதையடுத்து போலீசார் திலீப் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கு ராய்கர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் திலீப்புக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.












Click it and Unblock the Notifications