For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பஞ்சாபில் கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட பெண்ணை இரும்புக் கம்பியால் அடித்த 4 ஆண்கள்

By Siva
Google Oneindia Tamil News

லூதியானா: பஞ்சாபில் பட்டப்பகலில் பலபேர் கண் முன்பு 4 ஆண்கள் சேர்ந்து ஒரு பெண்ணை இரும்பு கம்பிகளால் தாக்கிய கொடூரம் நடந்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பட்டப்பகலில் 4 ஆண்கள் சேர்ந்து ஒரு பெண்ணை பலர் பார்க்க இரும்புக் கம்பியால் அடித்துள்ளனர். இதை வேடிக்கைப் பார்த்தவர்கள் யாரும் அப்பெண்ணுக்கு உதவ முன்வரவில்லை. மாறாக சத்தமின்றி நடப்பதை வேடிக்கை பார்த்துள்ளனர்.

அப்பெண்ணை தாக்கிய 4 பேரில் ஒருவர் அதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அந்த 4 பேரில் ஒருவரான மனோஜ் என்பவருக்கு தான் கடனாககொடுத்த ரூ.20,000 ரொக்கத்தை அப்பெண் திருப்பிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனோஜ் மேலும் 3 பேருடன் சேர்ந்து அப்பெண்ணை தாக்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பஞ்சாபில் புகார் கொடுக்க வந்த பெண் மற்றும் அவரது தந்தையை போலீசார் அடித்த சம்பவம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A woman was beaten up by 4 men in broad daylight in Punjab's Ludhiana. One of the four men recorded the incident in his cellphone.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X