தமிழக சட்டசபை தொடர் முழுவதும் திமுக எம்.எல்.ஏக்கள் சஸ்பென்ட்
சென்னை: தமிழக சட்டசபை தொடர் முழுவதும் திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் இன்று முதல் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது அதிமுக எம்எல்ஏ ரவி பேசும் போது, தாழ்த்தப்பட்டோரின் சம்பந்தி என்று சிலர் கூறுகின்றனர் எனத் தெரிவித்து பேசத் தொடங்கினார். அது திமுக தலைவர் கருணாநிதியை விமர்சிப்பதாக இருக்கிறது என்று கூறி கூறிய அவரது கருத்தை சபைக் குறிப்பில் இருந்து நீக்க திமுக உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் திமுக உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்க சபாநாயகர் மறுத்து விட்டார்.
இதனால் திமுக உறுப்பினர்கள் சட்டசபையில் தர்ணாவில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏக்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். பேரவை கூட்டத்தொடரில் 4-வது முறையாக திமுஅக்வினர் வெளியேற்றப்பட்டதால் திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பென்ட் செய்யப்ட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications