ஊட்டி: தண்ணீர் பிடிப்பதில் தகராறு தந்தை-மகன் கொலை: கணவன்- மனைவி- மகன் கைது
ஊட்டி: தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் தந்தை-மகன் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக கணவன், மனைவி, அவர்களது மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊட்டியைச் சேர்ந்த அருள்தாஸ் (45) மின்வாரியத்தில் பணியாற்றி வந்தார். இவரது மகன் பிராங்க்ளின் (22).
அருள்தாஸ் குடும்பத்தினருக்கும், நாகராஜ் என்பவரின் குடும்பத்தினருக்கும் இடையே தண்ணீர் பிடிப்பதில் தகராறு இருந்து வந்தது.
இந் நிலையில் அருள்தாஸ், பிராங்க்ளின் இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது நாகராஜ், அவரது மனைவி பிரேமா, அவர்களது மகன் ஜெய்சங்கர், உறவினர் கிச்சான் ஆகியோர் அவர்களை வழிமறித்தனர். அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் நாகராஜ் கத்தியால் அருள்தாஸ் மற்றும் பிராங்க்ளின் ஆகியோரை குத்தினார். ரத்த வெள்ளத்தில் மிதந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த இரட்டைக் கொலை குறித்து தகவல் அறிந்த ஊட்டி போலீஸ் டி.எஸ்.பி அனிதா, இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நாகராஜ், அவரது மனைவி மற்றும் ஜெய்சங்கர், கிச்சான் ஆகியோரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications