அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இருந்தும் சென்னைக்கு ஏசி பஸ்: செந்தில் பாலாஜி
சென்னை: தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இருந்தும் சென்னைக்கு ஏசி பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது செந்தில் பாலாஜி கூறுகையில். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இருந்து சென்னைக்கு குளிர்சாதன பேருந்துகள் இயக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் தற்போது கோவை, மதுரையில் இருந்து சென்னைக்கு குளிர்சாதன பேருந்து விட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மற்ற ஊர்களில் இருந்தும் விரைவில் பேருந்துகள் விடப்படும். தற்போது வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் நவீனமயமாக இருக்க வேண்டும் என்பதற்காக விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளை அல்ட்ரா டீலக்ஸ் பேருந்தாக கூண்டு கட்டி இயக்கவும், முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார்.
49 இருக்கை கொண்ட அல்ட்ரா டீலக்ஸ் பேருந்தில் இருக்கைகளை 43 ஆக குறைத்து வசதியுடன் பயணிகளுக்காக இயக்குகிறோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications