ட்விட்டருக்கு குட் பை சொன்ன ராஜ்தீப் சர்தேசாய்...
டெல்லி: ட்விட்டர் சமூக வலை தளத்தில் இருந்து தாம் விலகப் போவதாக பிரபல ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய் அறிவித்திருக்கிறார்.
சி.என்.என். ஐபிஎன் தொலைக்காட்சி மூலமாக பரபரப்பான அரசியல் விவாதங்களை நடத்தும் ராஜ்தீப், ட்விட்டர் சமூக வலைதளத்திலும் அந்த ஆக்ரோஷம் குறையாமல் பரப்பான விவாதங்களில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் திடீரென தமது ட்விட்டர் பக்கத்தில் "A journalist has only his integrity/credibility. That has been abused on this medium for too long by unknown people. Time to switch off" என்று அறிவித்திருக்கிறார்.
இதற்கு பதில் ட்வீட் அடித்தவர்களோ, அப்படியெல்லாம் சட்டென வெளியேறிவிட வேண்டாம்... தொடர்ந்தும் போராட வேண்டும். உங்களை விமர்சிப்பவர்களை பலப்படுத்திவிடும் என்று பலரும் பதிவிட்டிருக்கின்றனர். ஒருசிலரோ "குட் பை' சொல்லி வழியனுப்பியும் வைத்திருக்கின்றனர்.