டெல்லி சிறுமி பலாத்கார சம்பவம்- போலீஸ் அலட்சியம் குறித்து விசாரணை: ஷிண்டே அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் போலீசாரின் அலட்சியம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
லோக்சபாவில் இன்று சிறுமி பலாத்கார சம்பவம் தொடர்பாக ஷிண்டே விளக்கம் அளித்து பேசுகையில், 5 வயது சிறுமி காணாமல் போனது குறித்து உடனடியாக விசாரிக்காமல் காவல்துறை அலட்சியமாக இருந்தது குறித்து விசாரணை நடத்தப்படும். காவல்நிலைய அதிகாரி, விசாரணை அதிகாரி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து வெளியில் சொல்லாமல் இருக்க, சிறுமியின் தந்தைக்கு போலீசார் ஒருவர் ரூ.2000 லஞ்சமாக கொடுத்துள்ளார். இது தொடர்பாகவும் புலனாய்வு அமைப்பு விசாரிக்கும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications