For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புனேவில் மனநலம் பாதித்த பெண்ணை கற்பழித்த வார்டு பாய், லஞ்சம் கொடுக்க முயன்ற டாக்டர் தம்பதி கைது

By Siva
Google Oneindia Tamil News

புனே: புனேவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த 22 வயது மனநலம் சரியில்லாத பெண்ணை கற்பழித்த மருத்துவமனை ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

மகராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் சின்ச்வாட் நகர் அருகே உள்ள வால்ஹெகர்வாடியில் டாக்டர் விஷால் சோனாவானே(34) மற்றும் அவரது மனைவி டாக்டர் வர்ஷா(31) ஆகியோர் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த மருத்துவமனையில் 22 வயது மனநலம் பாதித்த பெண் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அந்த பெண்ணை மருத்துவமனையில் பணிபுரியும் சுபாஷ் மொதாத்(22) என்பவர் கற்பழித்துள்ளார்.

இந்த விவகாரத்தை போலீசில் தெரிவிக்காமல் இருக்க டாக்டர் தம்பதி அப்பெண்ணின் தந்தைக்கு லஞ்சம் கொடுக்க முயன்றுள்ளனர். இதையடுத்து அப்பெண்ணின் தந்தை போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்போரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சுபாஷை கைது செய்தனர். மேலும் லஞ்சம் கொடுக்க முயன்ற டாக்டர் தம்பதியும் கைது செய்யப்பட்டனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் போலீசில் காவலில் வைக்கப்பட்டனர்.

English summary
A 22-year-old mentally challenged woman was raped allegedly by a ward boy at a nursing home whose doctors have been arrested on charge of trying to bribe the victim's kin to hush up the matter. The incident occurred at Walhekarwadi in Chinchwad town near hear on April 16 in the nursing home run by Dr Vishal Sonawane (34) and his wife Dr Varsha (31) where the victim was undergoing treatment, police said on Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X