புனேவில் மனநலம் பாதித்த பெண்ணை கற்பழித்த வார்டு பாய், லஞ்சம் கொடுக்க முயன்ற டாக்டர் தம்பதி கைது

Subscribe to Oneindia Tamil

புனே: புனேவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த 22 வயது மனநலம் சரியில்லாத பெண்ணை கற்பழித்த மருத்துவமனை ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

மகராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் சின்ச்வாட் நகர் அருகே உள்ள வால்ஹெகர்வாடியில் டாக்டர் விஷால் சோனாவானே(34) மற்றும் அவரது மனைவி டாக்டர் வர்ஷா(31) ஆகியோர் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த மருத்துவமனையில் 22 வயது மனநலம் பாதித்த பெண் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அந்த பெண்ணை மருத்துவமனையில் பணிபுரியும் சுபாஷ் மொதாத்(22) என்பவர் கற்பழித்துள்ளார்.

இந்த விவகாரத்தை போலீசில் தெரிவிக்காமல் இருக்க டாக்டர் தம்பதி அப்பெண்ணின் தந்தைக்கு லஞ்சம் கொடுக்க முயன்றுள்ளனர். இதையடுத்து அப்பெண்ணின் தந்தை போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்போரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சுபாஷை கைது செய்தனர். மேலும் லஞ்சம் கொடுக்க முயன்ற டாக்டர் தம்பதியும் கைது செய்யப்பட்டனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் போலீசில் காவலில் வைக்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+