நீலகிரி மாவட்டத்தில் ரூ. 7,000 கோடியில் 2,000 மெகாவாட் மின் நிலையம்:
ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் 2 x 800 மெகாவாட் திறன் கொண்ட மின் நிலையம் அமைக்கப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
மின்சார உற்பத்தியில் தன்னிறைவு பெற்றால் தான் தமிழகம் தலை சிறந்த மாநிலமாக விளங்க முடியும் என்பதை நன்கு உணர்ந்துள்ள எனது தலைமையிலான அரசு, அதனை எய்தும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள மின் திட்டங்களை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
நீலகிரி மாவட்டத்தில், 7,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2,000 மெகாவாட் மின் திறன் கொண்ட சில்லஹல்லா நீரேற்று புனல் மின் திட்டம் உருவாக்கப்படும். இந்தத் திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும்.
சுரங்க நீர்வழித்தடம்:
முதற்கட்டமாக, குந்தா நதியின் துணை நதியான சில்லஹல்லா ஆற்றின் குறுக்கே, 90.8 மீட்டர் உயரத்திற்கு 2.25 டி.எம்.சி. அடி கொள்ளளவு கொண்ட சில்லஹல்லா மேல் நீர்த்தேக்கம் நிறுவப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ள 5.5 டி.எம்.சி அடி கொள்ளவு கொண்ட அவலாஞ்சி எமரால்டு நீர்த்தேக்கங்களுடன் இணைக்கப்படும். இதனை இணைப்பதற்காக 2,750 மீட்டர் நீளமுடைய சுரங்க நீர்வழித்தடம் அமைக்கப்படும்.
இரண்டாவது கட்டமாக, உத்தேசிக்கப்பட்டுள்ள சில்ல ஹல்லா நீர்த் தேக்கத்திற்கும், பில்லூர் நீர்தேக்கத்திற்கும் இடையே உள்ள 1,500 மீட்டர் உயரத்தைப் பயன்படுத்தி 2,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யக் கூடிய மின் நிலையம் அமைக்கப்படும்.
இரவு நேர உபரி மின்சாரத்தைப் பயன்படுத்தி நீர் ஏற்றத் திட்டம்:
இந்த மின் நிலையம் நிலத்தடி மின் நிலையமாக, அமையும். மின் உற்பத்திக்குப் பின் உபயோகப்படுத்தப்பட்ட நீர், கடைவாயில் சுரங்கம், வழியாக பில்லூர் நீர்த் தேக்கத்தை அடையும். நிலத்தடி மின் நிலையத்தை அடைய அணுகு சுரங்க வழி அமைக்கப்படும். இத்திட்டம் நிறைவு பெற சுமார் 8 முதல் 10 ஆண்டுகள் ஆகும்.
மேலும் இத்திட்டம், அதிகரித்து வரும் காற்றாலை மின் உற்பத்தி, நிறுவப்படவுள்ள சூரிய மின் உற்பத்தி மற்றும் இரவு நேரங்களில் அனல் மற்றும் அணு மின் நிலையங்களில் மிகையாகக் கிடைக்கப் பெறும் மின்சாரத்தை சேமித்து வைக்கும் விதமாக, இந்த உபரி மின்சாரத்தைப் பயன்படுத்தி கீழ் நீர்த் தேக்கத்திலிருந்து மேல் நீர்த்தேக்கத்திற்கு நீர் ஏற்றி வைக்கப்படும். அவ்வாறு ஏற்றித் தேக்கப்பட்ட நீரையே பயன்படுத்தி உச்ச மின் தேவை காலங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்படும்.
-
கோவை, நீலகிரிக்கு பறந்த அலர்ட்.. கொட்டப்போகும் மழை! வானிலை மையம் கொடுத்த அப்டேட்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications