பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த கார் குண்டு கண்டுபிடிப்பு: தவறுதலாக கைதான 3 இந்தியர்கள் விடுதலை
மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த கார் வெடிகுண்டு சதி முறியடிக்கப்பட்டது. சதிகாரர்கள் என கைது செய்யப்பட்ட 3 இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் கலாபர்சான் பிராந்தியத்தில் மகர்லிகா நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டு இருந்த காரில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டு இருந்தது போலீசாரால் கண்டுபிடிக்கப் பட்டது. ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ‘கிரேடு சி4' ரகத்தை சேர்ந்த சக்தி வாய்ந்த வெடிபொருளால் தயாரிக்கப்பட்ட அந்த நவீன குண்டு, கார் என்ஜினில் பொருத்தப்பட்டு, செல்போன் மூலம் அதை இயக்கி வெடிக்க சதித்திட்டம் தீட்டப்பட்டு இருந்ததாக தெரிகிறது.
ஆனால், செல்போனில் இருந்த பேட்டரி நழுவியதால், அச்சதி நிறைவேறவில்லை. பின் வெடிக்காத அந்த குண்டை போலீசார் கைப்பற்றி செயல் இழக்க வைத்தனர். விசாரணையில், அந்த வெடிகுண்டை மறைத்து வைத்தது இந்தியாவைச்சேர்ந்த நரேந்தர்சிங், ரஜெத்குமார், ஜஸ்பீர்சிங் ஆகியோர் என்பது தெரிய வந்தது. அவர்கள் 3 பேரும் ஜான்பெனிடோ நகரில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.
முதலில் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின் காரை சரி செய்வதற்காக விடப்பட்ட ஒர்க்ஷாப்பில் தான் தவறு நடந்திருக்கிறது என வக்கீல்கள் நிரூபித்தப்பின் வழக்கை திரும்பப் பெற்று கைது செய்த மூவரையும் விடுதலை செய்தது போலீஸ்.












Click it and Unblock the Notifications