ரொம்பவே மோசமான ஊழல் மலிந்த பாஜக அரசு: கர்நாடகாவில் மன்மோகன்சிங் தாக்கு!

கர்நாடக மாநிலத்தில் மே 5-ந் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக இன்று ஹூப்ளியில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மன்மோகன்சிங் பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளில் 3 முதல்வர்களை மாற்றிவிட்டது பாஜக. பாஜகவின் பல அரசியல்வாதிகள் மீது ஊழல் வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஒரு மோசமான நிர்வாகத்தையே பாஜக வழங்கியிருக்கிறது. வளர்ச்சித் திட்டங்கள் மீது எந்த ஒரு அக்கறையும் காட்டப்படவில்லை. இதனால் கர்நாடகத்தின் வளர்ச்சி முடங்கிப் போய்கிடக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் ஏராளமான பாசனத் திட்டங்கள் முடங்கிக் கிடக்கின்றன. வேலைவாய்ப்பிலும் வேளாண்துறையிலும் அக்கறையே செலுத்தப்படவில்லை. உள்கட்டமைப்புத் துறையிலும் கர்நாடக பாஜக அரசு அக்கறை காட்டாததால் புனேவுக்கும் ஹைதராபாத்துக்கும் ஏராளமான தொழிற்சாலைகள் இடம்பெயர்ந்துவிட்டன.
குறிப்பாக ராய்ச்சூ, பெல்லாரி, குல்பர்கா, பிதார் ஆகிய சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகள் கவனிக்கப்படவே இல்லை. இப்பகுதிகளில் சிறுபான்மையினர் அச்சத்துடன் பாதுகாப்பற்ற உணர்வோடு வாழ்கின்றனர் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications