பி.என்.ஆர் ஸ்டேட்டஸ் அறிய ரயில்வேக்கு வந்த 120 கோடி தொலைபேசி அழைப்புகள்!
Subscribe to Oneindia Tamil

இந்திய ரயில்வேயில் பயணிகளின் தகவல் விசாரணைக்காக தேசிய தொலைபேசி விசாரணை சேவை 2007-ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. இந்த சேவை தொலைபேசி எண் 139 ஆகும்.
இந்த எண்ணுக்கு கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கி 6 ஆண்டுகளில் 120 கோடி தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளனவாம். கடந்த ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக 29 கோடியே 20 லட்சம் அழைப்புகள் வந்திருக்கின்றன.
ஒரு நாளைக்கு சராசரியாக வந்துள்ள தொலைபேசி அழைப்புகளின் எண்ணிக்கை 8 லட்சம் ஆகும். பெரும்பாலான பயணிகள், டிக்கெட் முன்பதிவு நிலவரத்தை (பி.என்.ஆர்.) அறிவதற்காகவே இந்த சேவையை பயன்படுத்தி உள்ளதாக தெரிய வந்துள்ளது.
ரயில்கள் வந்து சேரும் நேரம், புறப்படும் நேரம் பற்றியும் விசாரணை அழைப்புகள் அதிகமாக வந்துள்ளன. இந்தி பேசும் வடமாநில மக்களே இந்த சேவையை அதிகமாக பயன்படுத்துகின்றனராம்.












Click it and Unblock the Notifications