For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிகனேரில் 10ம் வகுப்பு மாணவிக்கு லிப்ட் கொடுத்து கற்பழித்த பள்ளி பஸ் டிரைவர் கைது

By Siva
Google Oneindia Tamil News

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளி பேருந்தில் வைத்து 15 வயது மாணவியை கற்பழித்த பஸ் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

ராஜஸ்தான் மாநிலம் பிரனேரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் கடந்த 26ம் தேதி பள்ளிக்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக காலியான பள்ளி பேருந்து ஒன்று சென்றது. பேருந்தை நிறுத்திய டிரைவர் ராஜேஷ் குமார்(35) மாணவியை பள்ளியில் இறக்கிவிடுவதாகக் கூறியுள்ளார்.

இதையடுத்து மாணவி பேருந்தில் ஏறினார். அப்போது டிரைவர் மயக்க மருந்து கலந்த கூல் டிரிங்கை மாணவிக்கு கொடுத்து அவரை கற்பழித்தார். பின்னர் மாணவியை மறுநாள் காலை காஜுவாலா மருத்துவமனை அருகே இறக்கிவிட்டுவிட்டு அவர் சென்றுவிட்டார். இது குறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் ராஜேஷ் குமார் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக ஜெய்பூரில் பார்வையற்றவர்களுக்காக என்ஜிஓ அமைப்பு நடத்தும் கல்வி மைய விடுதியில் தங்கியிருக்கும் ஒரு மாணவியை வார்டன் பிரஷாந்த் வியாஸ்(35) தன்னுடன் உறவு வைத்துக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். இதையடுத்து கல்வி நிர்வாகம் கொடுத்த புகாரின்பேரில் பிரஷாந்த் நேற்று கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Rajesh Kumar (35), a driver of a school bus was arrested for allegedly raping a 15-year-old girl in Bikaner.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X