மூன்றாவது அணி அமைப்பது எளிதல்ல: பிரகாஷ் காரத்

திரிபுராவில் நடந்த கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் பேசிய அவர், வரும் மக்களவைத் தேர்தலில் மூன்றாவது அணி அமைப்பது குறித்து பலரும் பேசி வருகிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட ஓர் அணியை அமைப்பது எளிதானதல்ல.
ஏனென்றால் மாநில கட்சிகளின் சந்தர்ப்பவாத அரசியல் மூன்றாவது அணி அமைப்பதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும்.
அதிமுக, சமாஜவாதி, பிஜு ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் போன்ற கட்சிகள் மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கு ஏற்ப காங்கிரஸ் அல்லது பாஜக பக்கம் சாய்ந்துவிடும்.
இப்போதுள்ள மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தி பாஜக எப்படியாவது மீண்டும் ஆட்சிக்கு வரத் துடிக்கிறது. ஆனால் காங்கிரசுக்கு சரியான மாற்றாக பாஜக இருக்க முடியாது.
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசில் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், ஊழல் போன்றவை அதிகரித்துள்ளன. அதனால் 2014-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் காங்கிரஸை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும்; அதே சமயம் மதவாதக் கட்சியான பாஜகவும் ஆட்சியை கைப்பற்றி விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஆகையால் காங்கிரஸ், பாஜக அல்லாத ஒரு மாற்றுக் கூட்டணியை உருவாக்குவது குறித்து அனைவரும் யோசிக்க வேண்டும் என்றார் பிரகாஷ் காரத்.












Click it and Unblock the Notifications