போடி அருகே ஆடு மேய்த்த 7 வயது சிறுமியை கற்பழித்த காமக்கொடூரனுக்கு தர்ம அடி

Subscribe to Oneindia Tamil

தேனி: போடி அருகே மாந்தோப்பில் 7 வயது சிறுமியை கற்பழித்தவரை ஊர் மக்கள் பிடித்து மரத்தில் கட்டி வைத்து அடித்தனர்.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள அணைக்கரைபட்டி ஊராட்சிக்குட்பட்டது சோலையூர். இந்த கிராமத்தில் உள்ள மாந்தோப்பு ஒன்றில் போடியைச் சேர்ந்த குடும்பம் ஒன்று தங்கி காவல் காத்து வருகின்றனர். அவர்களுக்கு 7 வயதில் ஒரு மகள் இருக்கிறார். அவர்கள் தோப்பிலேயே சமைத்து சாப்பிட்டு தூங்கினர். சிறுமி ஆடு மேய்த்தார். சிறுமியிடம் அதே பகுதியைச் சேர்ந்த முனியாண்டி(25) என்பவர் அடிக்கடி பேசி வந்துள்ளார்.

குடிப்பழக்கம் உள்ள முனியாண்டி போதையில் தன்னிடம் தவறாக பேசியது சிறுமிக்கு தெரியவில்லை. இந்நிலையில் நேற்று காலை மாந்தோப்பில் சிறுமி ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது முனியாண்டி அங்கு வந்து சிறுமியைக் கற்பழித்துவிட்டு ஓடிவிட்டார்.

கற்பழிக்கப்பட்ட சிறுமி அதே இடத்தில் மயங்கிக் கிடந்தார். அப்போது அந்த வழியாக வந்த அதே பகுதியைச் சேர்ந்த வடமலு என்ற பெண் சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று குளிக்க வைத்து உணவு கொடுத்தார். அதன் பிறகு அவருக்கு வேறு உடை கொடுத்து அணியச் சொல்லி அவரது வீட்டில் கொண்டு போய் விட்டார்.

இரவு நேரத்தில் சிறுமிக்கு திடீர் என்று பயங்ர காய்ச்சல் ஏற்பட்டது. விசாரித்தபோது முனியாண்டி தன்னிடம் தவறாக நடந்ததை சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து ஊர் மக்கள் சேர்ந்து முனியாண்டியை மரத்தில் கட்டி வைத்து அடித்து நொறுக்கினர். பின்னர் இது குறித்து குரங்கனி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

போலீசார் வந்து முனியாண்டியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+