தேர்தலில் போட்டியிட முஷாரப்புக்கு வாழ்நாள் தடை: பாகிஸ்தான் கோர்ட்டு அதிரடி

பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் முஷாரப் மீது 2007-ம் ஆண்டில் நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தியது, பெனாசிர் பூட்டோவுக்கு உரிய பாதுகாப்பு வழங்காததால் அவர் படுகொலை செய்யப்பட்டது, சட்டத்துக்கு புறம்பாக 60 நீதிபதிகளை பதவி நீக்கம் செய்து சிறையில் அடைத்தது, 2006-ம் ஆண்டில் ராணுவ தாக்குதலில் பஜோக் இயக்க தலைவர் அக்பர் பக்தி கொல்லப்பட்டது உள்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யபட்டன. கடந்த 4 ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த 69 வயது முஷாரப் தற்போது நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக அண்மையில் பாகிஸ்தானுக்கு திரும்பினார். 4 தொகுதிகளில் போட்டியிட தாக்கல் செய்த அவரது மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன..
தற்போது 60 நீதிபதிகளை சிறையில் அடைத்தது மற்றும் பெனாசிர் பூட்டோ படுகொலை தொடர்பான வழக்கில் முஷரப் கைது செய்யப்பட்டுள்ளார். வேட்பு மனுக்கள் தள்ளுபடியை எதிர்த்து முஷாரப் சார்பில், பெஷாவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. தலைமை நீதிபதி முகமதுகான் தலைமையிலான 4 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரணை நடத்தியது. முஷாரப்பின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த தலைமை நீதிபதி முகமதுகான், முஷாரப் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதித்து தீர்ப்பு கூறினார். பாகிஸ்தானில் 2 முறை தேர்தல் நடத்த தடை விதித்ததற்கும் 2007-ம் ஆண்டு நெருக்கடி நிலையின்போது நீதிபதிகள் சிறை வைக்கப்பட்டதற்காகவும் இந்த தடை விதிக்கப்படுவதாக தலைமை நீதிபதி தெரிவித்திருக்கிறார்..
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications