சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற கோரி மே 15ம் தேதி தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டம்: திமுக

திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் சென்னையில் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 1860-ஆம் ஆண்டு தொடங்கி பல்வேறு காலகட்டங்களில் திட்டமிடப்பட்டு, நிறைவேற்றப்படாமல் இருந்த தமிழக மக்களின் 150 ஆண்டு கால கனவுத் திட்டமான சேது சமுத்திரம் திட்டம் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வற்புறுத்துதலின் பேரில் 2005 ஜூலை 2-ந் தேதி மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்று தி.மு.க. ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம் வலியுறுத்தி வந்தது. இந்தியப் பிரதமர்களாக பொறுப்பேற்றவர்களுக்கு கருணாநிதி தொடர்ந்து கடிதம் வாயிலாகவும், நேரிலும் இத்திட்டம் குறித்து வலியுறுத்தி வந்திருக்கிறார். அண்ணா முதலமைச்சராக இருந்த நேரத்தில் 23-7-1967 அன்று சேது சமுத்திரம் திட்டம், அதன் ஒரு பிரிவாக தூத்துக்குடி துறைமுகத் திட்டம் மற்றும் சேலம் இரும்பாலைத் திட்டம் ஆகிய திட்டங்களை நிறைவேற்றிடக் கோரி, தி.மு.க. சார்பில் எழுச்சி நாள் அறிவித்து, மத்திய அரசினை வலியுறுத்தினார்.
ஆனால், ஏறத்தாழ 2,400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், சோனியாகாந்தி, கருணாநிதி ஆகியோர் முன்னிலையில் தொடங்கப்பட்ட சேது சமுத்திரத் திட்டம், சில பிற்போக்கு சக்திகளின் தூண்டுதல் காரணமாக, நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு இடைக்காலத் தடையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தங்களுடைய 2004-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை'யில் மட்டுமன்றி, 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிக்கையிலும் வலியுறுத்திய அ.தி.மு.க. தற்போது அந்தக் கோரிக்கைக்கு எதிராக மாறி, செயல்பட்டு வருகிறது. அதன் காரணமாக தமிழகத்தை ஆளும் அரசு, இத்திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருக்கிறது.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புக்கும் பெரிதும் துணை செய்யும் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், தமிழகம் மேலும் வளம் பெறும் என்பதை உணராமல், தமிழகத்தை ஆளும் அரசு இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதன் மூலம் மக்கள் விரோத ஆட்சியாக மாறியிருக்கிறது. இச்சூழ்நிலையில் ஏறத்தாழ 50%க்கும் மேல் பணிகள் முடிவடைந்த நிலையில் உள்ள சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து நிறைவேற்றிட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துவதற்காக, தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் எழுச்சி நாள் பொதுக்கூட்டங்கள் நடத்த தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ளது.
மாவட்டத் தலைநகரங்களிலும், மாவட்டத்தின் முக்கிய நகரங்களிலும் எழுச்சி நாள் பொதுக்கூட்டங்கள் வரும் 15-ந்தேதி நடைபெறும். கருணாநிதி வடசென்னையிலும், பொதுச்செயலாளர் (நான்) பேராசிரியர் அன்பழகன் கடலூரிலும், பொருளாளர் மு.க.ஸ்டாலின் கரூரிலும், துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன் கோவையிலும் நடைபெறும் எழுச்சி நாள் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசுகின்றனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி!












Click it and Unblock the Notifications