நாங்க கலவரம் செய்ய நெனச்சா தமிழகம் தாங்காது: கனல் கக்கிய காடுவெட்டி குரு!

மாமல்லபுரத்தில் அப்படி என்னதான் காடுவெட்டி குரு பேசினார்? இதுதான் அவருடைய பேச்சின் சுருக்கம்:
எங்க நோக்கம் கோட்டையை கைப்பற்றத்தான். கலவரம் செய்றது எங்க நோக்கமில்லே. நாங்க கலவரம் செய்ய நெனச்சா தமிழகம் தாங்காது. எங்களை அடக்குவதற்குக் காவல் துறையும் பத்தாது. நாங்கள் ஒன்றுசேர வேண்டும் என்று சொன்னால், ஒரு சமூகத்தினர் தடைவிதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்துக்குச் செல்கின்றனர். நாங்கள் நினைத்தால், தமிழகத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியும் மாநாடு நடத்த முடியாது. பொதுக்கூட்டம் போட முடியாது.
5 முறை கருணாநிதி முதல்வரு, 3 முறை ஜெயலலிதா முதல்வரு. நீங்க சாதியை ஒழிக்க வேண்டியதுதானே? காதல் என்ற பெயரில் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவன் மற்ற சமூகப் பெண்களிடம் அநாகரிகச் செயல்களில் ஈடுபட்டு வருகிறான். அவனால் ஏற்பட்டதுதான் தர்மபுரி கலவரம்.
கலப்புத் திருமணம் செய்தால்தான் சாதி ஒழியும் என்று சொல்கிற நீங்கள், உங்கள் தலித் பிரிவில் இருக்கிற சாதிகளுக்குள்ளேகூட பெண் கொடுத்துப் பெண் எடுப்பது இல்லையே. அங்கே என்ன தடுக்குது? சாதிதானே தடுக்குது. நாங்க வேணாம்னு சொன்னோமா?.
எத்தனை வழக்கு வேணாலும் போட்டுக்க. நாங்க பாக்காத சிறை கிடையாது. உண்மையில் வன்னியர்களுக்கு சாதி உணர்வே கிடையாது. அந்த உணர்வு இருந்திருந்தா தமிழ் நாட்டுல வன்னியன்தான் முதல்வரா இருந்திருப்பான்.
நாம் ஒண்ணா இருப்போம் கை கொடுன்னு அய்யா சொன்னாரு. கையைக் கொடுன்னா உன் பொண்ண கொடுங்கிறான். சாராயக் கடைகளைத் திறந்து எங்கள் சாதிக்காரனைக் குடிகாரனா மாத்திட்டீங்க. இதைத் தட்டிக்கேட்டதால், எங்க ஐயாவை மதுரைக்குப் போகக் கூடாது; தர்மபுரிக்குப் போகக் கூடாதுனு தடை போடறீங்க. அந்தத் தடையை உடைச்சுக்கிட்டு போக ரொம்ப நேரம் ஆகாது. எங்களுக்குத் தடை போட ஐயா ஒருத்தரால்தான் முடியும். ஐயா ஒரு வார்த்தை சொன்னா, தமிழ்நாடே அசையாது.
1981 முதல் 1987 வரை காவல் துறை அனுமதி கொடுக்க மறுத்தாலும் அதை மீறித்தான் கூட்டம் நடத்தினோம். அதை செய்ய இப்பவும் எங்களால முடியும். எங்களுக்கு தடை போடுறீங்களா? இப்போ, வன்னியர் வன்னியர்னு நல்லா கோஷம் போடுறீங்க. ஆனா எப்ப சாதிய நினைக்கணுமோ அப்ப மறந்துடுறீங்க, அதனால் மத்தவன் ஆட்சிக்கு வர்றான் என்றார் குரு.
இதில் மிகக் கடுமையான அவரது பேச்சுக்கள் எடிட் செய்து பிரசுரிக்கப்பட்டுள்ளது.
திருக்கச்சூர் ஆறுமுகம், அம்பத்தூர் சேகர் மீது குண்டாஸ்:
இதனிடையே பாமகவின் திருக்கச்சூர் ஆறுமுகம், அம்பத்தூர் சேகர் போன்ற இரண்டாம் கட்ட தலைவர்களை இலக்கு வைத்து அவர்களது பழைய குற்ற நடவடிக்கைகளின் அடிப்படையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் உள்ளே தள்ளவும் அரசு தீவிரம் காட்டுவதாக கூறப்படுகிறது.
இந்த இருவரும் பாமகவின் தேர்தல் நேரத்து முக்கியத் தலைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications