கருணாநிதி, ஸ்டாலினுடன் குஷ்பு ராசியாகிவிட்டாரோ?

திமுகவில் திடீரென ஐக்கியமாகி ஜெகஜோதியாக ஜொலித்தவர் குஷ்பு.. அண்மையில் திமுகவின் அடுத்த தலைவர் மு.க.ஸ்டாலின் என்பதை ஏற்க மறுத்து அவர் கொடுத்த பேட்டியால் சட்டென திமுகவில் அவரது நிலையை இறங்குமுகமாக்கியது. குஷ்பு வீடு தாக்குதலுக்குள்ளானது.. திருச்சியில் குஷ்புவும் தாக்கப்பட்டார்...இந்த பஞ்சாயத்துக்குப் பின் குஷ்பு ஓரங்கட்டப்பட்டார். அதே நேரத்தில் திமுகவில் புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, குஷ்புவுக்கு கொடுக்கப்படாத காரணத்தால் அவர் நீக்கப்படுகிறார் என்றும் காங்கிரஸ் ஜோதியில் ஐக்கியமாகிறார் என்றும் தகவல்கள் ரெக்கை கட்டி பறந்தன.
இந்த நிலையில் திடீரென குஷ்புவுக்கு 'ஸ்மார்ட் கார்டு' கொடுக்கப்பட்டது திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே கணவர் சுந்தர். சியுடன் நேற்று அறிவாலயத்துக்குப் போனார். கருணாநிதியின் அறைக்கு சென்ற குஷ்புவும் சுந்தரும் அங்கு கருணாநிதி மற்றும் ஸ்டாலினுடன் சந்தித்து பேசியிருக்கின்றனர். அப்போது, சுந்தர்.சி இயக்கும், தீயா வேலை செய்யனும் குமாரு என்ற திரைப்படத்தின், இசை வெளியீட்டு விழா அழைப்பிதழை இருவருக்கும் குஷ்பு கொடுத்ததாகவும் அறிவாலய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்ப இனி 'தீயா திமுகவுக்காக கட்சிப் பணி ஆற்றுவாரோ குஷ்பு?'












Click it and Unblock the Notifications