காஞ்சிபுரம்- திருத்தணியில் தனியார் பஸ்களைக் கொளுத்திய பாமக- அச்சத்தில் தொழிலாளர்கள்!

பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களின் உற்பபத்திப் பணி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவடங்களில் ஏராளமான பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் உள்ளன.
இவற்றில் பணியாற்றும் தொழிலாளர்களை பஸ்கள் மூலம் கொண்டு வந்துவிடுவது வழக்கம். அப்படி ஏற்றிச் சென்ற ஒரு தனியார் நிறுவனப் பேருந்தை திருத்தணி அருகே தீயிட்டுக் கொளுத்திவிட்டு ஓடினர் சிலர். இதில் 2 தொழிலாளர்கள் காயமடைந்தனர். பஸ் முழுவதும் எரிந்துவிட்டது.
காஞ்சிபுரம் நகரில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயில் அருகே நின்றுகொண்டிருந்த தனியார் பேருந்தும் தீயிட்டு கொளுத்தப்பட்டது. இது படப்பை ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமானதாகும்.
இதனால் பணியாளர்கள் தொழிற்சாலைகளுக்குப் பயணிப்பதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க தொழிலாளர் பேருந்துகளை இரவில் இயக்க வேண்டாம் என போலீசார் வாய்மொழி உத்தரவு போட்டுள்ளனர். அப்படிச் செய்தால் இரவு நேர பணியே பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது பல தொழிற்சாலைகளில்.
பாமகவினரின் இந்த போக்கு மக்களின் வாழ்க்கை, தொழிற்சாலை சூழல் என அனைத்தையுமே பாதித்துள்ளது.












Click it and Unblock the Notifications