தீவிரவாதிகளின் மிரட்டல்.. வெளிநாடு போனார் பிலாவல் பூட்டோ!

பாகிஸ்தானில் வரும் 11-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலை ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் தலைமையில் சந்திப்போம் என்று அக்கட்சி அறிவித்திருந்தது. ஆனால் சிந்து மாகாணத்தில் அக்கட்சியின் தொண்டர்களிடையே மட்டும்தான் அவர் உரையாற்றினார். வேறு எங்கும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள்வில்லை. கடந்த 23-ந் தேதி கட்சித் தொண்டர்களுக்காக வெளியிட்ட வீடியோ காட்சியில், நானும் நமது நாட்டின் தெருக்களில் இறங்கி நமது கட்சிக்காக பிரசாரம் மேற்கொள்ளவே விரும்புகிறேன். ஆனால் எனது தாத்தா பூட்டோ, அம்மா பெனாசிர் ஆகியோரை படுகொலை செய்தவர்கள் என்னையும் அழிக்க நினைக்கிறார்கள்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் பிலாவல் ரகசியமாக வெளிநாடு சென்றுவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. இருப்பினும் அவர் எந்த நாட்டில் தலைமறைவாக இருக்கிறார் என்பதை அக்கட்சியின் தெரிவிக்க மறுத்துவிட்டனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஹைதர்,தீவிரவாத தாக்குதலுக்கு பெனாசிர் பூட்டோவை இழந்து விட்டோம். பிலாவலின் உயிருக்கு தொடர்ந்து தீவிரவாதிகளிடம் இருந்து அச்சுறுத்தல் வந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில், பிலாவலையும் தீவிரவாதத்திற்கு பலி கொடுக்க நாங்கள் விரும்பவில்லை. எனவே, எங்கள் கட்சியின் மேலிட தலைவர்களின் அறிவுறுத்தலின் பேரில் பிலாவல் பூட்டோ வெளிநாடு சென்றுள்ளார். அவர் எந்த நாட்டிற்கு சென்றுள்ளார்? பாகிஸ்தானுக்கு எப்போது திரும்புவார்? என்பது தொடர்பாக இப்போது எதுவும் கூற முடியாது என்றார்.
-
ஈரான் விவகாரத்தில் மத்தியஸ்தம்.. பாகிஸ்தானை நம்ப முடியாது! ஓபனாக சொன்ன இஸ்ரேல் -
போதையில் பாகிஸ்தான் அமைச்சர் செய்த காரியம்? மிக பெரிய போர் வெடித்திருக்கும்.. அலட்சியத்தின் உச்சம் -
லெபனானில் அமைதி திரும்பும் வரை பேச்சுவார்த்தை கிடையாது.. டிரம்பை சாய்த்த ஈரான்.. மிரண்ட பாகிஸ்தான் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது!












Click it and Unblock the Notifications