மலேசியத் தமிழர்களைக் கவர்ந்த எம்.ஜி.ஆர் பாடல்கள்…. தேர்தல் பிரச்சாரத்தில் சுவாரஸ்யம்
மலேசியா: மலேசியாவில் நடைபெற உள்ள தேர்தலில் தமிழக வாக்காளர்களைக் கவர எம்.ஜி.ஆர். பாடல்களையும், அவரது மேடைப் பேச்சுகளையும் போட்டு பிரச்சாரம் செய்தார்கள்.
மலேசியாவில் நாளை (5-ந்தேதி) பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதில் ஆளும் பாரிசான் நேசியனல் கூட்டணியும், எதிர்க் கட்சிகளின் கூட்டணியும் மோதுகின்றன. நாளை ஓட்டுப்பதிவு நடைபெறுவதையொட்டி அங்கு தீவிர தேர்தல் பிரசாரம் நடந்தது. வாக்காளர்களை கவர அரசியல் கட்சிகள் பல்வேறு உத்திகளை கையாண்டன.
மலேசியாவில் இந்தியர்கள் அதிக அளவில் உள்ளனர். அவர்களில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். எனவே அவர்களை கவர்ந்து வாக்குகளை பெற ஆளும் கட்சி கூட்டணி தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பட பாடல்களையும் அவருடைய பேச்சுக்களையும் போட்டு பிரசாரம் செய்து வருகின்றனர். இது வாக்காளர்களை பெரிதும் கவர்ந்தது.
எம்.ஜி.ஆர். மறைந்து சுமார் 26 வருடங்கள் ஆகி விட்ட நிலையில் தமிழ்நாட்டில் மட்டுமின்றி மலேசியாவிலும் இன்னும் அவரது புகழ் மங்க வில்லை என்றும் மக்கள் மனதில் அவர் இன்றும் நிலைத்து வாழ்வதையை இது காட்டுகிறது என்று மலேசிய ஊடகங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications