ஐஸ்கிரீம் கொடுப்பதாக ஆசை காட்டி 6 வயது சிறுமியை கற்பழித்த காமுகன்
நாக்பூர்: திருமண விழாவுக்கு சென்ற 6 வயது சிறுமியை கற்பழித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மாராட்டிய மாநிலம் நாக்பூர் அருகே உள்ள கன்ஹான் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த திருமண விழாவுக்கு 6 வயது சிறுமி தனது பெற்றோருடன் வந்தாள். அந்த வளாகத்தின் மேல் மாடியில் உள்ள ஒரு அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருபவர் ராகேஷ் என்கிற சக்ரதார் ஜெகோஜி பெலே (வயது 27).
விழாவில் அனைவரும் உற்சாகமாக இருந்த சமயத்தில் ராகேஷ் சிறுமிக்கு ஐஸ் கிரீம் வாங்கிக்கொடுத்து ஏமாற்றி அந்த வளாகத்தில் இருந்த மறைவான பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு அந்த சிறுமியை அவர் கற்பழித்துள்ளான்.
அந்த சிறுமி படிக்கட்டு அருகே நின்று அழுது கொண்டிருந்த தகவல் கிடைத்து அவளது பெற்றோர் அங்கு வந்து விசாரித்தபோது தான் அவள் கற்பழிக்கப்பட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக அவர்கள் கன்ஹான் போலீசில் புகார் செய்தனர். போலீசார் பெலேவை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.












Click it and Unblock the Notifications