சத்தீஸ்கரில் பக்கத்துவீட்டு குழந்தைகள் 3 பேரை கல்லால் அடித்துக் கொன்றவருக்கு தூக்கு

Subscribe to Oneindia Tamil

பிலாஸ்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 மைனர் சகோதர, சகோதரிகளை கொன்றவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ளது ரத்னாபூர். அந்த ஊரைச் சேர்ந்தவர் ஷிவ்லால். அவருடைய குழந்தைகள் விஜய்(8), அஜய்(6) மற்றும் சாக்ஷி(4). கடந்த 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ம் தேதி அந்த 3 குழந்தைகளும் பள்ளியில் இருந்து வீடு திரும்பியபோது பக்கத்துவீட்டுக்காரரான மனோஜ் சூர்யவன்ஷி என்பவர் அவர்களை கடத்திச் சென்றார்.

அருகில் உள்ள வயலுக்கு அவர்களை கடத்திச் சென்று அங்கு வைத்து கல்லால் அடித்து அவர்களை கொன்றார். இந்த சம்பவம் நடந்த மறுநாள் சூர்யவன்ஷியை போலீசார் கைது செய்தனர். ஷிவ்லாலின் சகோதரர் ஷிவ்நாத்தை பழிவாங்க அவர் இந்த கொடூரத்தை செய்துள்ளார். தனது மனைவி ஷிவ்நாத்துடன் ஓடிப் போய்விட்டதாக நம்புவதால் அவர் இவ்வாறு செய்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த செஷன்ஸ் நீதிபதி நீதா யாதவ் சூர்யவன்ஷிக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+