2ஜி வழக்கு: படுத்த படுக்கையாக இருக்கும் தயாளு அம்மாளுக்கு கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி

Subscribe to Oneindia Tamil

2G: Dayalu Ammal too sick to depose, says counsel
டெல்லி: 2ஜி வழக்கில் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு விலக்கு அளிக்குமாறு கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவருக்கு மறதி நோய் இருப்பதுடன், படுத்த படுக்கையாக இருப்பதால் விலக்கு கோரப்பட்டுள்ளது.

2ஜி ஊழல் வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் நேற்று டெல்லியில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று தயாளு அம்மா சார்பில் அவரது வழக்கறிஞர் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது,

88 வயதாகும் தயாளு அம்மாளுக்கு அல்சீமர்ஸ் எனப்படும் மறதி நோய் உள்ளது. இதற்காக அவர் கடந்த ஒரு ஆண்டு காலமாக சிகிச்சை எடுத்து வருகிறார். மேலும் படுத்த படுக்கையாக உள்ளார். அப்படி இருக்கையில் அவரால் நீதிமன்றத்திற்கு வர முடியாது. நீதிமன்றம் விரும்பினால் ஒரு மருத்துவ குழுவை அனுப்பி தயாளு அம்மாளின் உடல் நிலையை பரிசோதித்து அறிக்கை அளிக்க உத்தரவிடலாம்.

அவரின் உடல் நிலையை கருத்தில் கொண்டு நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து அவருக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த சிறப்பு சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓபி சைனி இது குறித்து பதில் மனுவை செவ்வாய்க்கிழமை(இன்று) தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு உத்தரவிட்டார்.

2ஜி ஊழல் வழக்கில் 25-4-2011 அன்று சிபிஐ தாக்கல் செய்த 2வது குற்றப்பத்திரிக்கையில் தயாளு அம்மாளின் பெயர் சேர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+