மக்கள் டிவிக்கு தடை கோரும் விடுதலைச் சிறுத்தைகள்!

இதுதொடர்பாக அந்தக் கட்சி சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு தரப்பட்டுள்ளது. அந்த மனுவில், பேருந்துகள் மீது கல்வீச்சு சம்பவங்கள், சாலைகளில் மரங்களை போடுவது போன்ற சம்பவங்களில் பாமகவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் பாமகவினர் செய்யும் வன்முறை சம்பவங்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் செய்வதாக அவதூறு பரப்புகின்றனர்.
மேலும் பாமகவின் மக்கள் தொலைக்காட்சியின் மூலம் விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது அவதூறு பரப்பி வருகின்றனர். ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எதிராகவும் அவதூறு பரப்பி வரும் ராமதாஸ், காடுவெட்டி குரு, அன்பு ராமதாஸ் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும் மக்கள் தொலைக்காட்சியின் ஒளிபரப்பை தடை செய்து அதன் உரிமத்தை ரத்து செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் டிவிக்கு தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் டிவி ஒளிபரப்பை தடை செய்யும் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளதாக கூறப்படுவதால் இந்தத் தடை நடவடிக்கை உடனடியாக இருக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications