சீனா சென்றார் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்!
டெல்லி: லடாக் பகுதியில் ஊடுருவியிருந்த சீனா படைகள் தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கும் நிலையில் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் சீனாவுக்கு 2 நாள் பயணமாக இன்று புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் லடாக் எல்லையில் சுமார் 19 கிலோ மீட்டர் உள்ளே நுழைந்து முகாம்களை அமைத்திருந்தது சீனா. 21 நாட்கள் நீடித்த சீனாவின் இந்த ஆக்கிரமிப்பு பல சுற்று பேச்சுகளைத் தொடர்ந்து முடிவுக்கு வந்தது. சீன படைகள் வெளியேற ஒப்புக் கொண்டன. சீனா ஆட்சேபனை தெரிவித்திருந்த எல்லையில் அமைக்கப்பட்ட இந்திய பதுங்கு நிலைகளும் கைவிடப்பட்டன. அப்போதே வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் சீனா செல்வார் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்று சல்மான் குர்ஷித் சீனாவுக்கு 2 நாள் பயணமாக புறப்பட்டுச் சென்றுள்ளார். சீனாவின் புதிய பிரதமர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து இருதரப்பு உறவுகள் தொடர்பாக குர்ஷித் விவாதிக்க இருக்கிறார். மேலும் சீன பிரதமரின் இந்திய வருகை தொடர்பான தேதியும் இந்த சந்திப்பின் போது இறுதி செய்யப்பட இருக்கிறது.












Click it and Unblock the Notifications