தர்மபுரி கலவரம்: 5 பேர் கொண்ட விசாரணை குழுவை நியமித்த தமிழக அரசு
சென்னை: தர்மபுரி வன்முறை சம்பவம் குறித்து விசாரணை நடத்த 5 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.
தர்மபுரியில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வாலிபர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த சம்பவத்தால் அப்பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து தர்மபுரி அருகே உளள நாயக்கன்கொட்டாய், நத்தம் காலனி உள்ளிட்ட பகுதிகளில் வன்முறை வெடித்தது. தலித் மக்கள் வசிக்கும் வீடுகள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த வன்முறையால் பல வீடுகள் எரிந்தது சாம்பலானது. பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசம் அடைந்தது.
இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என அனைத்து கட்சிகளும் கோரிக்கை விடுத்தன. இதனையடுத்து அரசு நிவாரணம் வழங்கியது. இந்த மோதல் தொடர்பாக ஒரு குழு அமைத்து விசாரணையும் நடத்தியது.
தற்போது தர்மபுரி கலவரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வேளாண் துறை கூடுதல் செயலாளர் வாசுகி, கால்நடைத்துறை இயக்குனர் பழனிசாமி, சேலம் ஆர்.டி.ஓ. சதீஷ், ஆத்தூர் ஆர்.டி.ஓ. பொன்முத்துராமலிங்கம், கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ. மனோகரன் ஆகிய 5 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.
கலவரம் நடந்த இடங்களில் இந்த குழு விரிவான விசாரணையை நடத்தி,அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.












Click it and Unblock the Notifications