அடடே, சீனாவிடம் ஏன் எங்க நாட்டுக்குள் ஊடுறுவுனீங்கன்னு கேட்கலையே... சொல்கிறார் குர்ஷித்

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை நாளுக்கு நாள் பெரும் கேலிக்கூத்தாகி வருகிறது. பாகிஸ்தானிடம் மட்டும் அவ்வப்போது சீறுவதையே பெரிய வெற்றி போல பேசி வருகிறது இந்தியா. ஆனால் சீனா நமது நாட்டுக்குள் தைரியமாக வந்து உட்கார்ந்து கொண்டபோது ஒன்றுமே பேசவில்லை இந்தியா. அதேபோல இலங்கைக்காரர்கள் தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கி வரும்போதும் அதுகுறித்துக் கவலைப்படுவதே இல்லை. இப்படிப் போய்க் கொண்டிருக்கிறது இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை.
இந்த நிலையில், சீனா சென்ற மத்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித், சீன ராணுவத்தின் ஊடுறுவல் குறித்து அவர்களிடம் எதுவுமே கேட்கவில்லை என்று சொல்லியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், லடாக் பகுதிக்குள் சீன ராணுவம் ஊடுறுவி வந்தது இரு நாட்டு உறவுகளில் ஒரு கறையாக மாறியுள்ளது. இதற்கான காரணம் குறித்து சீன அரசு இதுவரை எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை.
எனது சீனப் பயணத்தின்போதும் நான் அதுகுறித்து கேட்கவில்லை. குறிப்பாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யூயியிடம் இதுகுறித்து நான் எதுவும் பேசவில்லை. பிரச்சினை முடிந்தது குறித்து வாங் திருப்தி தெரிவித்தார். நானும் அதையே செய்தேன். இந்தப் பிரச்சினைக்கான காரணத்தை ஆராய்ந்தால் அது பல சிக்கல்களையே தோற்றுவிக்கும்.
சீனத் தரப்பிலும் இதுகுறித்து விரிவாகப் பேசவில்லை.நாங்களும் கேட்கவில்லை. இந்த ஆக்கிரமிப்புக்கு சீன அரசு தூண்டுதலாக இருந்ததா என்பது குறித்து நாம் பேச முடியாது. அதுகுறித்து கருத்து தெரிவிக்க முடியாது. நடந்தது தொலைதூரத்தில் உள்ள பகுதி. அரசுக்கு இதுகுறித்துத் தகவல் வரவே நீண்ட நேரமாகும். எனவே இதுகுறித்த ஆய்வுகள் முடிய நீண்ட நாட்கள் ஆகும் என்றார் அவர்.
குர்ஷித் இன்று சீனப் பிரதமர் லீ கெகாங்கை சந்திக்கிறார்.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications