நரபலி: ஜார்க்கண்ட் போலீஸ்காரர் கைது, 11 எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு, 2 சிறுமிகள் மீட்பு
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2 சிறுமிகளை பலியிட முயன்ற போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் இருந்து 11 எலும்புக்கூடுகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் கான்ஸ்டபிளாக இருப்பவர் முன்னிலால். அவர் நேற்று மாலை வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த உமேஷ் யாதவ் என்பவரின் மகள்கள் சீமா(7) மற்றும் சோட்டி(4) ஆகியோருக்கு சாக்லேட் கொடுத்து தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். இதையடுத்து உமேஷ் குடும்பத்தார் சிறுமிகளை பல இடங்களில் தேடிப் பார்த்தனர். பின்னர் அவர்கள் முன்னிலாலின் வீட்டில் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் அங்கு சென்று கை, கால்கள் கட்டப்பட்டு இருந்த சிறுமிகளை மீட்டனர். அவர்களை நரபலி கொடுக்க முன்னிலால் கடத்தியது தெரிய வந்தது. முன்னிலால் சிறுமிகளை காளிக்கு பலி கொடுக்கவிருந்ததாக சிறுமிகளின் குடும்பத்தார் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் முன்னிலாலை கைது செய்து அவரது வீட்டை சோதனையிட்டனர். சோதனையில் அவரது வீட்டில் 11 எலும்புக் கூடுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications