ஐ.ஏ.எஸ் ஆகணும் இது அகல்யாவின் விருப்பம்
Subscribe to Oneindia Tamil
ஓசூர்: ப்ளஸ் 2 தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ள ஓசூர் அகல்யாவிற்கு ஐ.ஏ.எஸ் ஆவது லட்சியம் என்று கூறியுள்ளார்.
பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் தமிழக அளவில் 1188 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார் ஓசூரை சேர்ந்த அகல்யா. இவரது தந்தை தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். தாயார் இல்லத்தரசியாக இருக்கிறார். அகல்யா மேற்படிப்பில் எலக்ட்ரானிக்ஸ் இஞ்சினியரிங் படிக்க உள்ளதாக கூறியுள்ளார். ஐ.ஏ.எஸ் ஆவதே எதிர்கால லட்சியம் என்று கூறியுள்ளார்.
ரேடியாலஜி மருத்தவர்
இதேபோல் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த மாணவர் பழனிராஜ் திருச்செங்கோடு பள்ளியில் படித்தவர். இவரது தந்தை வங்கியில் பணிபுரிகிறார். பழனிராஜூக்கு ரேடியாலஜி மருத்துவர் ஆகவேண்டும் என்பதுதான் விருப்பமாம்.












Click it and Unblock the Notifications