ரிசல்ட் தெரியலையே? கண்ணீருடன் தவிக்கும் திண்டுக்கல் மாணவி
திண்டுக்கல்: திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் ப்ளஸ் டூ தேர்வு எழுதிய மாணவி ஒருவரது பெயர் விடுபட்டுள்ளதால் தேர்வு முடிவு தெரியாமல் தவித்து வருகிறார். அவரது கேள்விக்கு பதிலளிக்காமல் கல்வித்துறை அதிகாரிகள் அலட்சியம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.
தாமரைப்பாடி என்ற ஊரைச் சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவரது மகள் அமுதா. இவர் திண்டுக்கல் அருகே ம.மு.கோவிலூரில் உள்ள சி.எஸ்.எம்.ஏ மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து தேர்வு எழுதியுள்ளார்.
இந்தநிலையில் நேற்று தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்வதற்காக பள்ளிக்கு வந்த மாணவிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தேர்வு முடிவுகள் பட்டியலில் அந்த மாணவியின் பெயரும், தேர்வு எண்ணும் இடம் பெறவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, தனது தந்தையுடன் மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு சென்று விளக்கம் கேட்டுள்ளார்.
"எப்படி மிஸ் ஆச்சுன்னு தெரியல" பல லட்சம் பேரு தேர்வு எழுதும் போது இது மாதிரி ஒன்னு ரெண்டு தப்பு நடக்கத்தான் செய்யும். நாளைக்கு வாங்க என்னன்னு பாக்கலாம்" என்ற அலட்சிய பதிலே கிடைத்திருக்கிறது.
அதைத் தொடந்து, அழுது கொண்டே திரும்பி சென்ற மாணவி அமுதா, இன்றும் மாவட்ட கல்வி அலுவலகத்தில் தனது முடிவைத் தெரிந்துக் கொள்வதற்காக கண்ணீருடன் காத்திருக்கிறார்.
1000 மார்க் வரும்
தனது மகள் அமுதா கண்டிப்பாக 1000 மதிப்பெண்களுக்கு மேலே எடுத்திருப்பார் என்று கூறினார் அவரது தந்தை பாலசுப்பிரமணியன்.
ரிசல்ட் என்னவென்றே தெரியவில்லை. எதுவுமே இல்லாம நம்பரை காணும்னு சொல்றாங்க. சி.இ.ஓ ஆபீசுக்கு வந்து கேட்டதுக்கு இதெல்லாம் சகஜம் தான், நாளைக்கு வந்து பாருங்கன்னு அனுப்பிட்டாங்க. இன்னிக்கு வந்ததுக்கு மெயில் பாத்துட்டு சொல்றோம்னு சொல்றாங்க. ரிசல்ட் தெரியாமல் என் மகள் சாப்பிடக்கூட மாட்டேன் என்று அழுதுகிட்டே இருக்கா என்கிறார் வேதனையுடன்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications