மத்திய அரசு மருந்துக்கொள்கைக்கு எதிர்ப்பு: மருந்துக்கடைகள் ஸ்டிரைக்
மதுரை: மத்திய அரசின் மருந்துக் கொள்கையை கண்டித்து நாடு தழுவிய அளவில் மருந்து கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் 2013 ஆம் ஆண்டுக்கான மருந்துக் கொள்கையின்படி, மருந்துத் துறையில் 51 சதவிகிதம் அந்நிய நேரடி முதலீடுக்கு வழிவகை ஏற்படும்.
வரைவு மசோதா நிலையில் உள்ள இந்த மசோதா நாடாளுமன்றத்தில் அடுத்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் புதிய மருந்து கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மருந்துப்பொருட்களின் விலை வரம்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் மருந்தாளுனர்கள் நாடு முழுவதும் இன்று கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிட்டத்தட்ட ஏழரை லட்சம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
அனைத்திந்திய மருந்தாளுநர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெறும் இந்த வேலைநிறுத்தத்தில் இருந்து மருத்துவமனை வளாக மருந்தகங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications