For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உருவானது மகாசேன் புயல்! சென்னையை நோக்கி வருவது சந்தேகம்

By Mathi
Google Oneindia Tamil News

Cyclone Mahasen near Chennai
சென்னை: வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக உருவெடுத்திருக்கிறது. ஆனால் இந்த மகாசேன் புயல் தற்போதைய நிலையில் சென்னையை நோக்கி வர வாய்ப்பு குறைவு என்றே சொல்லப்படுகிறது.

வங்கக் கடலில் அடுத்து உருவாகும் புயலுக்கு மகாசேன் என்று பெயரிடப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களாக வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி இருந்தது. இது எந்த நேரத்திலும் புயலாக உருவெடுக்கலாம் என்றும் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று சென்னையில் இருந்து 1700 கி.மீ தொலைவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலானது. இந்த மகாசேன் புயலானது வங்கதேசம்- மியான்மர் கடற்கரையை நோக்கி புயலாக நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புதிய புயல் சின்னத்தால் அடுத்த 36 மணி நேரத்துக்கு அந்தமான் பகுதியில் மணிக்கு 55 முதல் 65 கி.மீ வரையில் காற்று வீசும். அடுத்த 48 மணி நேரத்துக்கு பலத்த மழைக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனால் அந்தமான் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டிருக்கின்றனர்.

English summary
With a well-marked low pressure system now emerged Cyclone Mahasen inb Bay of Bengal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X