ராகுல் காந்திக்கு 'ப்ரீ' பேப்பர் கொடுத்த சிறுவனை தத்தெடுத்த காங்கிரஸ்
போபால்: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு, இலவசமாக செய்தித்தாளை கொடுத்த 10 வயது போபால் சிறுவனை தத்தெடுத்துள்ளது மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சி.
போபாலைச் சேர்ந்தவன் கெளஷல். 5ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த ஏப்ரல் 25ம் தேதி போபால் வந்த ராகுல் காந்தி, கெளஷலை அணுகி செய்தித்தாள் வாங்கினார். பின்னர் 1000 ரூபாய்த் தாளை அவனிடம் நீட்டினார். ஆனால் கெளஷல் அதைரப் பெற மறுத்தான்.என்னிடம் சில்லறை இல்லை. பேப்பரை ப்ரீயாகவே தருகிறேன். நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டான்.
இதனால் ஆச்சரியமடைந்த ராகுல் காந்தி, அவனிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு கிளம்பினார்.
இந்த நிலையில்,தற்போது அந்த சிறுவனை மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் கட்சி தத்தெடுத்துள்ளது. அவனை கட்சி அலுவலகத்திற்கு அழைத்து கெளரவித்த காங்கிரஸ் தலைவர்கள், காங்கிரஸ் கட்சி அவனை தத்தெடுப்பதை அறிவித்தனர்.
அந்த சிறுவனுக்கு கட்சி சார்பில் மாதம் ரூ.1000 வழங்கப்படுமாம். மேலும் அவனது படிப்புக்கும், அவனது கனவான டாக்டராகும் ஆசையையும் காங்கிரஸ் நிறைவேற்றும் என்று அறிவித்துள்ளனர். மூத்த காங்கிரஸ் தலைவர் சஜீத் அலி, கெளஷலின் தந்தைக்கு, அவர் நடத்தி வரும் கல்லூரியில் பியூன் வேலை தருவதாக உத்தரவாதம் அளித்தார்.












Click it and Unblock the Notifications