100வது பிறந்தநாள் கொண்டாடும் கேரளாவின் முதல் பெண் எம்.எல்.ஏ. ரோசம்மா
திருவனந்தபுரம்: கேரளாவின் முதல் பெண் எம்.எல்.ஏ. ரோசம்மா இன்று தனது 100வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவைச் சேர்ந்தவர் ரோசம்மா. கேரளாவின் முதல் பெண் எம்.எல்.ஏ.வான அவர் இன்று தனது 100வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். கடந்த 1957ம் ஆண்டு பத்தனம்திட்டா தேவிக்குளம் தொகுதியில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர் ரோசம்மா.
ரோசம்மாவின் கணவர் குன்னூஸ். அவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ஒரு மகள் சென்னையிலும், மற்றொரு மகள் ஓமனிலும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். குன்னூஸ் இறந்துவிட்டதால் ரோசம்மா பத்தனம்திட்டாவில் தனியாக வசித்து வருகிறார். 100 வயதானாலும் அவர் இன்னும் ஆரோக்யமாக தனது வேலைகளை தானே செய்து கொள்கிறார்.
இந்த வயதிலும் தினமும் 2 கிமீ நடைபயிற்சி மேற்கொள்கிறார். யார் உதவியையும் நாடாமல் வாழ்ந்து வருகிறார். மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம் என்று ரோசம்மா தெரிவித்துள்ளார். அளவாகவே உணவு சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளார் அவர். அதுவும் தனது ஆரோக்கியத்திற்கு ஒரு காரணம் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications