உலகம் உற்று நோக்கும் குஜராத்...: அமெரிக்க குஜராத்திகளிடையே வீடியோ கான்பரன்ஸ் மூலம் மோடி உரை!

குஜராத் தினத்தை முன்னிட்டு அமெரிக்கா வாழ் இந்தியர்களிடம் பேசிய மோடி, மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தவறான கொள்கைகளே நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது. அண்மையில் சீனா தனது ஆக்கிரமிப்பை திரும்பப் பெற்றுக்கொண்ட விஷயத்தில் அரசு என்ன செய்தது? இதுவரை இந்த விவகாரம் தெளிவுபடுத்தப்படடவில்லை...
குஜராத்தின் முன்னேற்றம் உலகத்தால் உற்றுநோக்கப்படுகிறது. இது எனது வெற்றி அல்ல 6 கோடி குஜராத்தியர்களின் வெற்றி ... குஜராத்தின் வளர்ச்சி ஒருங்கிணைந்த வளர்ச்சியாக உள்ளளது, கிராமப்புற மக்களுக்கும் உயரிய தொழில்நுட்பங்கள் சென்றடைந்துள்ளன. என்னுடைய செயல்பாடுகளைத்தான் மக்கள் கவனிக்கிறார்களே தவிர என்னைப் பற்றிய விமர்சனங்களை அல்ல..
குஜராத் மக்கள் கலாச்சார தூதர்களாக செயல்படுவது பலம் அளிக்கிறது; குஜராத்தில் 24 மணிநேர மின்வசதி செய்யப்பட்டுள்ளது. நான் ஆட்சிக்கு வருவதற்கு முன் காற்றாலை தொழில் என்பது குஜராத்தில் இல்லை; ஆனால் இன்று காற்றாலை துறை குஜராத்தியர்கள் பலருக்கும் வாழ்வாதாரத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.
அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை விட பெரியதாக சர்தார் வல்லபாய் படேலின் சிலையை அமைக்க திட்டமிட்டிருக்கிறோம். தாஜ்மஹாலுக்கு இணையாக குஜராத்தை மக்கள் கருதுகின்றனர். முன்னேற்றத்தை நோக்கிச் செல்ல நல் வாழ்த்துக்கள் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications