பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கு: கோவை வாலிபர்கள் 2 பேர் கேரளாவில் கைது
திருச்சூர்: பெங்களூர் பாஜக அலுவலகம் அருகே குண்டுவெடித்த வழக்கில் கோவையைச் சேர்ந்த 2 வாலிபர்கள் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 17ம் தேதி பெங்களூர் மல்லேஸ்வரத்தில் உள்ள பாஜக அலுவலகம் அருகே குண்டுவெடித்தது. இதில் 11 போலீசார் உள்பட 17 பேர் காயம் அடைந்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் குண்டு வைக்கப்பட்டிருந்த தமிழக பதிவு எண் கொண்ட பைக்கை வைத்து விசாரணையைத் துவங்கினர்.
இந்த வழக்கில் நெல்லையைச் சேர்ந்தவர்கள் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கோவையைச் சேர்ந்த சுல்பிகர் அலி(22) மற்றும் சபீர்(24) ஆகியோர் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குன்னம்குளம் அருகே உள்ள கெச்சேரியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சபீரின் உறவினர் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications